கொந்தளம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமில் 300 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 15-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்கள் கொந்தளம் ஊராட்சிக்குள்பட்ட கொந்தளம், கொந்தளம் மேட்டூர், காந்திநகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றன.
வெங்கரை கால்நடை மருத்துவர் மணிவேல் மற்றும் ஆவின் கால்நடை மருத்துவர் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் பசு,எருது மற்றும் 3 மாதங்களுக்கும் மேற்பட்ட கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமில் 181 பசுக்களுக்கும், 110 எருதுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறும் இம் முகாமை கால்நடை வளர்ப்போர் அனைவரும் பயன்படுத்துக் கொள்ளுமாறு கால்நடை மருத்துவர் மணிவேல் அறிவுறுத்தினார்.