நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என இந்து உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்தது.
அக்கூட்டமைப்பு சார்பில், நாமக்கல்லில் இந்திய தேசம், தெய்வீகம், தர்மம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மருத்துவர் சந்திரன் தலைமை வகித்தார். ஏகாம்பரம் முன்னிலை வகித்தார். இதில், இந்திய தேசத்தையும், இந்துக் கோயில்களையும் பாதுகாக்கும் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். நாமக்கல் மக்களவைத் தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி.காளியப்பனை வெற்றி பெறச்செய்வதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்து உணர்வாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.