ஜேடர்பாளையம் அருகேயுள்ள ஈ.நல்லாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி பழனிசாமி (60), விபத்தில் இறந்தார்.
இவர் கடந்த மாதம் 31-ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் ஈ.நல்லாகவுண்டம்பாளையத்தில் இருந்து சோழசிராமணிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்ப சோழசிராமணி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது இரு சக்கர வாகனம் மீது ஜேடர்பாளையத்தில் இருந்து சோழசிராமணியை நோக்கி சென்ற லாரி மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த பழனிசாமி, ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி. அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து, எடப்பாடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் குமாரை (28) கைது செய்தனர்.