லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பலி

பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 


பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 
 பரமத்தி வேலூர் அருகே உள்ள படமுடிபாளையத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் நிஷாந்த் குமார் (18).  இவர் திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரில் தொழிற்பயிற்சி இரண்டாமாண்டு படித்து வந்தார்.  இவரும் இவரது நண்பரான பரமத்திவேலூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் மகன் தினேஷ்குமார் (18) என்பவரும் வெள்ளிக்கிழமை இரவு தெற்கு நல்லியாம்பாளையம் பகுதியில்  உள்ள நண்பரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.  அப்போது பழைய தேசிய நெடுஞ்சாலையில் கூட்டுறவு வங்கி அருகே பிரிவு சாலையைக் கடக்க முயன்றபோது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற லாரி,  இரு சக்கர வாகனம் மீது மோதியது.  இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் நிஷாந்த்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய  தினேஷ்குமாரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரசாந்தை (29) பரமத்திவேலூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com