முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், புதன்கிழமை இரவு சி.பி.ஐ.யினரால் கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் மாவட்டத் தலைவர் மருத்துவர் செழியன் தலைமை வகித்தார் தமிழ்நாடு பொதுக்குழு உறுப்பினர்கள் பீ.ஏ.சித்திக், வி.பி.வீரப்பன், மெஞ்ஞானமூர்த்தி, டி.வி.பாண்டியன், எம்.குமரன், மருத்துவர் வி.செந்தில், திருச்செங்கோடு நகரத் தலைவர் செல்வகுமார், நாமக்கல் நகரத் தலைவர் மோகன், குமாரபாளையம் மாவட்டசச் செயலாளர் தங்கராஜ், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கன்னியம்மாள், சேவா தள மாநில இணைச் செயலாளர் எஸ்எஸ்கே.செல்வகுமார், லோகநாதன், வரதராஜ், மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.