நாமக்கல்
இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் பலி
பரமத்தி அருகே இருசக்கர வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற ஓய்வுபெற்ற தபால் துறை ஊழியர் உயிரிழந்தார்.
பரமத்தி அருகே இருசக்கர வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற ஓய்வுபெற்ற தபால் துறை ஊழியர் உயிரிழந்தார்.
ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்த நல்லுசாமி (65), ஓய்வுபெற்ற தபால்துறை ஊழியர். இவர் புதன்கிழமை இரவு பரமத்தி அருகே கோனூரில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் நாமக்கல்லில் இருந்து கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். பரமத்தி அருகே உள்ள காரைக்கால் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நல்லுசாமி மீது மோதியது. இதில் நல்லுசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயமடைந்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.