எலச்சிப்பாளையம் ஒன்றியம் இலுப்புலி ஊராட்சியில் விலையில்லா வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட 144 பயனாளிகளுக்கு சந்தையில் ஆடுகள் வாங்குவது அரசு விதிமுறைகள், திட்ட நோக்கம் குறித்து முதற்கட்ட பயிற்சி இலுப்புலி மாரியம்மன் கோயில் திடலில் அண்மையில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பில், சந்தையில் நல்ல ஆரோக்கியமான ஆட்டுக்குட்டிகள் எவ்வாறு கண்டறிந்து வாங்குவது, நோய் அறிகுறிகள் கண்டறிவது, தீவனம் அளிக்கும் முறைகள், குளிர்கால பராமரிப்பு முறைகள் பற்றி கால்நடை மருத்துவர் குமரவேல் மற்றும் ராஜா ஆகியோர் விளக்கினர். திட்ட செயலாக்கம் குறித்து மருத்துவர் பாலாஜி எடுத்துரைத்தார்.