மோகனூரில் மாடு பூ தாண்டும் விழா

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மோகனூர் அருகே மாடு பூ தாண்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மோகனூர் அருகே மாடு பூ தாண்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
நாமக்கல் மாவட்டத்தில் வாழவந்திநாடு, பிள்ளூர்நாடு உள்ளிட்ட இடங்களில் தொட்டியநாய்க்கர் சமூகத்தினர் பரவலாக வசித்து வருகின்றனர். அவர்கள் 5 தலைமுறையாக மாடு பூ தாண்டும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காப்புக் கட்டிய மறுநாள் முதல் ஊர் ஊராகச் சென்று நன்கொடை வசூல் செய்கின்றனர். தொடர்ந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் மஞ்சள்தூள், ஆவாரம்பூ, கரும்பு, வெற்றிலை பாக்கு கொண்டு எல்லைக்கோடு அமைக்கின்றனர்.
தொடர்ந்து கோயில் மாடுகளை குறிப்பிட்ட இடத்தில் இருந்து விரட்டுகின்றனர். அந்த மாடுகள் ஓடிவந்து எல்லைக்கோட்டை தாண்டுவதை பூ தாண்டும் விழாவாக அந்த சமூகத்தினர் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
விழா மோகனூர் பகுதியில் ஊனாங்கல்பட்டி, ஒத்தையூர், நல்லையம்பட்டி, மேலப்பட்டி,  தொட்டிப்பட்டி, மேலப்பட்டி, வடக்குப்பட்டி ஆகிய கிராமங்களில் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
ஊனாங்கல்பட்டி, ஒத்தையூர் மற்றும் தொட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் நடத்திய மாடு பூ தாண்டும் நிகழ்ச்சி ஊனாங்கல்பட்டியில் நடந்தது. ஊனாங்கல்பட்டி, சின்னபெத்தாம்பட்டி, குன்னத்தூர், மேலப்பட்டி, மல்லுமாச்சம்பட்டி கிராமங்களை  சுவாமி மாடுகள் பங்கேற்றன.
மூன்று முறை மாடு பூ தாண்டும் போட்டி நடந்தது. அதில் சின்னபெத்தாம்பட்டி சுவாமி மாடு வெற்றி பெற்றது. தொடர்ந்து அந்த ஊர்  கோமாளியை குதிரை மீது அமரவைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். நிகழ்ச்சியை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com