நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பில், உலக மக்கள் தொகை தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி வளாகத்தில் ஓவியப் போட்டி நடை பெற்றது. மாணவ, மாணவியர் பங்கேற்று ஆர்வமுடன் ஓவியம் வரைந்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசியர்கள் பார்வையிட்டு சிறப்பான ஓவியங்களுக்கு பரிசுகளை வழங்கினர்.