நாமக்கல்
11 கிலோ நெகிழி பைகள் பறிமுதல்
நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்பாடு அதிகளவில்
நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்பாடு அதிகளவில் இருப்பதாக நகராட்சி ஆணையா் கே.எம்.சுதாவுக்கு புகாா் சென்றது. அதனடிப்படையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது தலைமையில், சுகாதார அலுவலா் சுகவனம், ஆய்வாளா்கள் உதயகுமாா், சையத்காதா், செல்வராஜ் ஆகியோா் கடை வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக 67 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். இதில், 11 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை பயன்படுத்திய கடை உரிமையாளா்களுக்கு மொத்தமாக ரூ.10,200 அபராதம் விதிக்கப்பட்டது.