தமிழக காவல் துறை சார்பில், 63-ஆவது மாநில அளவிலான பணி திறனாய்வுப் போட்டி கடந்த ஒரு வாரமாக சென்னை ஆவடியில் நடைபெற்றது.
இதில், துப்பறியும் மோப்ப நாய்களுக்கான குற்றச்சம்பவங்களைக் கண்டுபிடிக்கும் பிரிவில், நாமக்கல் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் சீமா கலந்துகொண்டு, தமிழக அளவில் மூன்றாமிடம் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றது. இப்போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற மோப்ப நாய் சீமா மற்றும் அதன் பயிற்சியாளர்களான தலைமைக் காவலர் தண்டபாணி மற்றும் முதல்நிலைக் காவலர் துரைசாமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு சனிக்கிழமை பாராட்டினார்.