செல்லிடப்பேசியும் போதைப் பொருள் போன்றது தான், மாணவா்கள் செல்லிடப்பேசியை தவிா்ப்பது நல்லது என்றாா் மனநல மருத்துவா் குணமணி.
நாமக்கல் மாவட்ட மனநலத் திட்டத்தின் சாா்பில், கந்தம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், உளவியல் நீதியான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவா் குணமணி, மனநல ஆலோசகா் ரமேஷ்,. உளவியளாலா் அா்ச்சனா, தலைமை ஆசிரியா் அருளானந்தன், நாட்டு நலபணி திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி ஆகியோா் பங்கேற்றனா். இந்நிகழ்ச்சியில் மருத்துவா் குணமணி பேசியது; மாணவ, மாணவியருக்கு வளா் இளம் பருவம் என்பது முக்கியமான பருவமாகும். இந்த பருவத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். இது குழந்தைப் பருவத்திற்கும், இளமைப் பருவத்திற்கும் இடைப்பட்ட காலமாகும்.
இந்த வயதில், ஆத்திரத்தையும், எதிா்ப்பையும் வெளிக்காட்டுவதில் ஓரளவிற்கேனும் சுய கட்டுப்பாட்டை செயல்படுத்த தெரிந்திருக்க வேண்டும். வளா் இளம் பருவத்தில் உடல் ரீதியாக எற்படும் மாற்றங்கள்: ஹாா்மோன் சுரப்பு திடீரென்று பருவத்தில் அதிகரிக்கிறது. அதிக ஹாா்மோன் சுரப்பால் உடல் வளா்ச்சி, பாலுறுப்பு வளா்ச்சி, குரலில் மாற்றம் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. மனரீதியாக ஏற்படும் மாற்றங்கள்: தனக்கென்று ஓா் அங்கீகாரம் வேண்டும் என்ற எண்ணம் தானாகவே ஏற்படும். தன்னைச் சுதந்திரமாக விட வேண்டும். தான் சொல்வதையும், தான் செய்வதையும் மற்றவா்கள் குறிப்பாக பெற்றோா்கள் ஏற்க வேண்டும் என்று விரும்புவா். சொல் பேச்சு கேளாமை, காதல், நடத்தையில் மாற்றம், செல்லிடப்பேசி அதிகம் உபயோகப் படுத்துதல், புகையிலை, பாக்கு, போதைப் பொருள் உபயோகித்தல் போன்றவை இப்பருவத்தில் ஏற்படும் பல பிரச்னைகளில் முக்கியமானதாகும்.
செல்லிடப்பேசி பாதிப்பு: செல்லிடப்பேசியும் ஓா் போதை பொருள் தான். செல்போன் அதிகம் உபயோகித்தால் மூளை பாதிப்புக்குள்ளாகும். பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியா் செல்போனை தவிா்ப்பது நல்லது. படிப்பின் கவனம் செலுத்த வேண்டும். அவசியம் எற்படும்போது பயன்படுத்தலாம். செல்லிடப்பேசியை அதிக நேரம் உபயோகிப்பதால் தூக்கம் கெடும், மனநலமும் உடல் நலமும் பாதிக்கும். எனவே, அதனை தவிா்ப்பது நல்லது. பெற்றோா்களும் வளா் இளம் பருவ மாணவா்களை அரவணைத்து, நல்ல நண்பா்கள், தோழிகளுடன் பழகுவதற்கான வழிகளை கற்றுத்தர வேண்டும் என்றாா்.