மக்காச்சோளம் விலை அதிகமாகவுள்ளதால், பண்ணைகளில் கோழித்தீவனமாக கோதுமையை பயன்படுத்தலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், கோழிகளில் வெப்ப அயற்சியும், வெப்ப அதிர்ச்சியும் காணப்படும். கோழிகளுக்கான தீவனத்தில் எலக்ட்ரோலைட், வைட்டமின் சி அமினோ அமிலங்கள் மற்றும் தாவர எண்ணெய் சேர்க்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மக்காச்சோளத்தின் விலை அதிகரித்துள்ளதால், அதற்கு மாற்றாக கோதுமையை தீவனமாக இடலாம். வழக்கம்போல் கோடைகால மேலாண்மை முறைகளை தவறாது பண்ணையாளர்கள் கையாள வேண்டும். வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க நீர்தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.