மீன்பிடி தடைக் காலம் எதிரொலி: முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்வு

மீன்பிடி தடைக் காலம் மற்றும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைவதாலும்,  நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை

மீன்பிடி தடைக் காலம் மற்றும் ஈஸ்டர் பண்டிகை முடிவடைவதாலும்,  நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து,  பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.65-ஆக திங்கள்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், வாரந்தோறும் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி,  திங்கள்கிழமையன்று அக் குழுவின் தலைவர் டாக்டர் பி. செல்வராஜ் தலைமையில் விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில்,  கிழக்கு கடற்கரையில் மீன்பிடி தடைக் காலம் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருவதாலும்,  ஈஸ்டர் பண்டிகை வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுவதாலும்,  தமிழகம், கேரளத்தில் முட்டை விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.  எனவே,  முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்தி ரூ.3.65-ஆக நிர்ணயம் செய்வதென முடிவெடுக்கப்பட்டது.  வரும் நாள்களில் முட்டை விலை மேலும் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.  சென்னை மண்டலத்தில் முட்டை விலை மாற்றமில்லாமல் ரூ.3.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்-311. விஜயவாடா-335, பர்வாலா-300, மும்பை-364, மைசூரு-361, பெங்களூரு-355, கொல்கத்தா-390, தில்லி-318, ஹோஸ்பெட்-320.
பல்லடத்தில் நடைபெற்ற கோழி விலை நிர்ணய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டைக்கோழி விலை கிலோ ரூ.71-ஆகவும், கறிக்கோழி கிலோ ரூ.90-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com