நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயமடைந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
வேலகவுண்டம்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி மகன் சம்பு (28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 24-ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த சம்புவை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சம்பு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இந்த விபத்தில் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த வேலகவுண்டம்பட்டியைச் சேர்ந்த ஞானபிரபு (48) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.