வல்வில் ஓரி சிலைக்கு அபிஷேக ஆராதனை

ராசிபுரம்  கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள கடையேழு  வள்ளல்களில் ஒருவரான வல்வில்  ஓரி  உருவச் சிலைக்கு அபிஷேக  ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம்  கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள கடையேழு  வள்ளல்களில் ஒருவரான வல்வில்  ஓரி  உருவச் சிலைக்கு அபிஷேக  ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது.
கடையேழு  வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரிக்கு 20-ஆவது  ஆண்டாக ராசிபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள பழமை வாய்ந்த அவரது  சிலைக்கு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
வன்னியர் சங்கம்,  ராசிபுரம் வல்வில் ஓரி விழா மேம்பாட்டுக் குழு சார்பாக இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.  பாமக மாநில துணைத் தலைவர் ச.வடிவேலன்,  மாநில துணைப் பொதுச்செயலாளர் காளியப்பன், ஒருங்கிணைப்பாளர்கள் பாலு, ஆ.மோகன்ராஜ், கெளதம்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com