இளம்பெண்ணை கடத்திச் சென்றதாக, இருவரை போலீஸார் கைது செய்தனர்.
மோகனூரைச் சேர்ந்த, 17 வயது இளம்பெண்ணை கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் காணவில்லை. புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸார், இளம்பெண்ணைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், வளையப்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி மகன் ராம்குமார்(22) என்பவர் அரியலுôரில் உள்ள தனது உறவினரான அய்யாவு மகன் மாரிமுத்துவின் (24) வீட்டில் இளம்பெண்ணை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர், அங்கு சென்ற போலீஸார் பெண்ணை மீட்டு வந்தனர். இதையடுத்து, போக்úஸா சட்டத்தில் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.