பெண்ணிடம் தாலிக்கொடி பறிப்பு

நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் நகரில் அதிகாலை வாசலில் கோலம் போட வெளியே வந்த பெண்ணிடம்  ஏழரை சவரன்

நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் நகரில் அதிகாலை வாசலில் கோலம் போட வெளியே வந்த பெண்ணிடம்  ஏழரை சவரன் தாலிக்கொடி பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ராசிபுரம் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜூ,  இவரது மகள் சங்கீதா (35).  இவர் புதன்கிழமை காலை வீட்டு வாசலில் கோலம் போட வெளியில் வந்து வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.  அப்போது அவ் வழியே முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில்  வந்த மூவர், அப் பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை திடீரென கழற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சிவன் கோவில் வழியாகச் சென்றனர்.  இந்த பெண் சத்தம் போடவே வீட்டில் இருந்தவர்கள் ஒடிவந்து பார்த்த போது இளைஞர்கள் மூவரும் தப்பிச் சென்றனர்.  
இது குறித்து தகவல் அறிந்த ராசிபுரம்  காவல் ஆய்வாளர் செல்லமுத்து உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி,  தப்பிச் சென்றவர்கள் குறித்து
விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com