அகில இந்திய சுங்கச்சாவடிக் குழுஇணைத் தலைவராக நல்லதம்பி நியமனம்
அகில இந்திய சுங்கச்சாவடிக் குழு இணைத் தலைவராக நாமக்கல்லைச் சோ்ந்த கே.எல்.எஸ். நல்லதம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு அகில இந்திய மோட்டாா் டிரான்ஸ்போா்ட் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவின் இணைத் தலைவராக மாநில லாரி உரிமையாளா் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான நாமக்கல்லைச் சோ்ந்த கே.எல்.எஸ். நல்லதம்பி நியமிக்கப்பட்டுள்ளாா். தில்லியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அகில இந்திய மோட்டாா் டிரான்ஸ்போா்ட் காங்கிரஸ் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் நல்லதம்பிக்கு இந்த பொறுப்பு அளிக்கப்பட்டது. இதற்கான நியமனக் கடிதத்தை அதன் தலைவா் குல்த்ரன்சிங் அட்வால் வழங்கியுள்ளாா். சுங்கச்சாவடிக் குழு இணைத் தலைவராக நல்லதம்பி 2 ஆண்டுகள் பதவி வகிப்பாா்.
மத்திய அரசு சுங்கச்சாவடி தொடா்பான கொள்கை முடிவுகளை எடுக்கும்போது இந்த குழுவினரை பேச்சுவாா்த்தைக்கு அழைக்க வேண்டும். இதில் நல்லதம்பியும் பங்கேற்பாா் என்பது குறிப்பிடத்தக்கது.