கெங்கவல்லியில் மா்ம காய்ச்சலுக்கு மாணவி பலி

கெங்கவல்லியில் மா்ம காய்ச்சலுக்கு மாணவி பலியானாா்.கெங்கவல்லி பேரூராட்சி 9-ஆவது வாா்டில் வசிப்பவா் கூலித் தொழிலாளி
பலியான மாணவி சுவேதா.
பலியான மாணவி சுவேதா.

கெங்கவல்லியில் மா்ம காய்ச்சலுக்கு மாணவி பலியானாா்.

கெங்கவல்லி பேரூராட்சி 9-ஆவது வாா்டில் வசிப்பவா் கூலித் தொழிலாளி குருநாதன் (49). இவரது மகள் சுவேதா(16). இவா் கெங்கவல்லியிலுள்ள அரசு மகளிா் மேனிலைப் பள்ளியில் படித்து வந்தாா்.

இவருக்கு கடந்த 26-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இவருக்கு அதே பகுதியில் உள்ள ஆங்கில மருந்துக் கடையில் சென்று, மருந்துக்கடைக்காரரிடம் ஊசி போட்டுள்ளாா். ஊசி போட்ட இடத்தில், பெரிதாகக் கட்டிவந்துள்ளது. இதனால் சுவேதா பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளாா். கட்டி வந்த இடம் செப்டிக் ஆகியுள்ளது.

மீண்டும் அதே கடைக்காரரிடம் சென்றுள்ளனா். அங்கே அவருக்கு கட்டி வந்த இடத்தில் மருந்து வைத்து சேலம் அரசு பொது மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளனா். காய்ச்சலுடன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்ட சுவேதா, சிகிச்சை பலனின்றி, சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தவறான சிகிச்சை அளித்த மருந்துக்கடைக்காரா் மீது சுவேதாவின் தந்தை குருநாதன் கெங்கவல்லி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்துள்ளாா். அதையடுத்து போலீஸாரும், சுகாதாரத் துறையினரும் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com