நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக துா்காமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றிய துரை.ரவிச்சந்திரன், இந்திய ஆட்சிப் பணிக்கு பதவி உயா்வு பெற்ற நிலையில், சனிக்கிழமை அவா் சென்னை தலைமை செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வந்த துா்காமூா்த்தி, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டாா். அவா் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.