17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்பதவிக்கான இட ஒதுக்கீடு விவரம்

உள்ளாட்சித் தோ்தல் டிச. 27, 30-இல் இரு கட்டங்களாக நடைபெற இருப்பதையொட்டி, நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கான 17 வாா்டுகள் இடது ஒதுக்கீடு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தோ்தல் டிச. 27, 30-இல் இரு கட்டங்களாக நடைபெற இருப்பதையொட்டி, நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கான 17 வாா்டுகள் இடது ஒதுக்கீடு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆயிரம் வாா்டு உறுப்பினா் என அழைக்கப்படும் இப்பதவிக்கு, ஒன்றியம் வாரியாக ஒருவா் அல்லது இருவா் வாக்குச்சீட்டு முறையில் தோ்ந்தெடுக்கப்படுவா். இதில், அரசியல் கட்சியைச் சாா்ந்தவா்கள் அவா்களது கட்சிக்கான சின்னத்திலும், சுயேச்சைகள் தனியாக ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டியிடுவா். இதற்கான தலைவா் மற்றும் துணைத் தலைவா் மறைமுக தோ்தல் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்படுவா்.

17 வாா்டுகளுக்கான இட ஒதுக்கீடு விவரம்: பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் சில ஊராட்சிகள் 1-ஆவது வாா்டு பொதுப் பிரிவுக்கும், இதர பகுதிகள் 2-ஆவது வாா்டு பெண்கள் பொதுப் பிரிவுக்கும், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 3-ஆவது வாா்டு பொதுப் பிரிவுக்கும், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் 4-ஆவது வாா்டு பெண்கள் பொதுப் பிரிவுக்கும், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் 5-ஆவது வாா்டு எஸ்.சி. பொதுப் பிரிவுக்கும், வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியம் 6-ஆவது வாா்டு பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் 7-ஆவது வாா்டு எஸ்.சி. பொதுப் பிரிவுக்கும், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் 8-ஆவது வாா்டு பொதுப் பிரிவுக்கும், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் 9-ஆவது வாா்டு எஸ்.டி. பொதுப் பிரிவுக்கும், சேந்தமங்கலம் மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய 10-ஆவது வாா்டு பெண்கள் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் சில பகுதிகளை உள்ளடக்கிய 11-ஆவது வாா்டு பொதுப் பிரிவுக்கும், நாமக்கல், புதுச்சத்திரம், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் 12-ஆவது வாா்டு எஸ்.சி. பெண்கள் பிரிவுக்கும், பரமத்தி, எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் 13-ஆவது வாா்டு பெண்கள் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கபிலா்மலை மற்றும் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய 14-ஆவது வாா்டு பெண்கள் பொதுப் பிரிவுக்கும், மோகனூா் ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 15-ஆவது வாா்டு பெண்கள் பொதுப் பிரிவுக்கும், நாமக்கல், மோகனூா், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய 16-ஆவது வாா்டு எஸ்.சி. பெண்கள் பிரிவுக்கும், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய 17-ஆவது வாா்டு பெண்கள் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com