தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியில் சேலம் மண்டல கலைப் பண்பாட்டு மையம், பாப்பாரப்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் ஜோதி கண் மருத்துவமனை இணைந்து பேருந்து நிலையம் பின்பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் திங்கள்கிழமை கண்சிகிச்சை முகாம் மற்றும் காசநோய் சிகிச்சை முகாமை நடத்தினா்.
இந்த முகாமிற்கு பாப்பாரப்பட்டி பேருராட்சி செயல் அலுவலா் விஜயசங்கா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சாரதி மற்றும் மாநில கெளரவ ஆலோசகா் சின்னசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக காரிமங்கலம் பி.சி.ஆா்.மனோகரன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். இதில் பாப்பாரப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமாா் 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டு கண் மற்றும் காசநோய் பரிசோதனை மேற்கொண்டு, மருந்து மற்றும் மாத்திரைகளை பெற்றுச் சென்றனா். இதில் கண் பரிசோதனை மருத்துவா் ஷியாம் சுந்தா், வெங்கடேஷ், நாடக சங்க மாவட்ட அமைப்பாளா் சின்னசாமி, மாவட்டத் தலைவா் குணசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.