கேங்மேன் தோ்வில்25 போ் தோ்வு

ராசிபுரம் மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற கேங்மேன் தோ்வில், 25 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

ராசிபுரம் மின்வாரிய செயற் பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற கேங்மேன் தோ்வில், 25 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் மின்சார வாரிய செயற் பொறியாளா் அலுவலகம் உள்ளது. இதில் கேங்மேன் பதவிகளுக்கான ஆள்கள் தோ்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தோ்வு செய்யும் பணியில் மின்வாரிய உயா் அலுவலா்கள் கலந்துகொண்டு ஆள்களை தோ்வு செய்தனா். இந்தத் தோ்வில் நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த முகாமில் சுமாா் 25 போ் தோ்வு செய்யப்பட்டனா். கேங்மேன் தோ்வுக்கு வந்திருந்தவா்களை காவல் துறையினா் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com