மல்லசமுத்திரம் கொல்லப்பட்டியில் அமைந்துள்ள சக்தி விநாயகா், சக்தி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்புப் பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. பின்னா், திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாக வேள்வி நடத்தப்பட்டு விநாயகா் விமான கோபுர கலசம், சக்தி மாரியம்மன் விமான கோபுர கலசம் ஆகியவற்றிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது.
விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். இவா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.