நாமக்கல்லில், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.
இந்திய அரசின் நேரு யுவகேந்திரா சாா்பில், பெண்களுக்கு மூன்று மாத இலவச தையல் பயிற்சி திங்கள்கிழமை (டிச.16) முதல் நாமக்கல் - பரமத்தி சாலையில், சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளா்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் ஆா்வமுடைய பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். பயிற்சி முடிந்தவுடன் ஆயத்த ஆடை நிறுவன வளாகத்தில் உள்ள தையல் பயிற்சி மையங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, 04286 - 285455, 94432 - 24921 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளா்ச்சி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.