மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.750 வரை விலை உயர்வு

பரமத்தி வேலூர் வட்டத்தில் அறுவடை செய்த மரவள்ளிக் கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு

பரமத்தி வேலூர் வட்டத்தில் அறுவடை செய்த மரவள்ளிக் கிழங்கின் விலை டன் ஒன்றுக்கு ரூ.750 வரை உயர்வடைந்துள்ளதால் மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர் வட்டத்தில் எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம்,  செங்கப்பள்ளி,  பரமத்தி,  பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை,  சின்னமருதூர், சோழசிராமணி,  பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம்,  மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.  கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்
படுகிறது. 
மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச் சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது  ரூ.750 வரை விலை உயர்ந்து டன் ஒன்று ரூ. 5 ஆயிரத்து 750வரை விற்பனையாகி வருகிறது. மரவள்ளிக் கிழங்கின் விலை உயர்வடைந்துள்ளதால் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com