சென்னை எழும்பூர் - சேலம் ரயிலை கரூர் வரை நீட்டிக்க வேண்டும் என நாமக்கல் எம்பி. பி.ஆர்.சுந்தரம் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் நேரில் வலியுறுத்தினார்.
புது தில்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை அண்மையில் நேரில் சந்தித்த அவர், நாமக்கல், ராசிபுரம், மோகனூர் பகுதி மக்களின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து, சேலம் வரை இயக்கப்பட்டு வரும் ரயிலை கரூர் வரை நீட்டிக்க வேண்டும். மேலும் சேலம் - கரூர் பயணிகள் ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் சேலம், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர் பகுதியைச் சேர்ந்த பயணிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனையடுத்து சேலம் - கரூர் பயணிகள் ரயில் மீண்டும் பிப்.15 முதல் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.