பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக ராசிபுரம் ஆ.மோகன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர், ராசிபுரம் நகர பா.ம.க. செயலாளராக பணியாற்றிய இவரை மாநில செயற்குழு உறுப்பினராக கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒப்புதலோடு, கட்சியின் தலைவர் ஜி.கே.மணி நியமனம் செய்துள்ளார்.