மருத்துவ முகாம்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் மொளசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் மொளசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட சமுதாய சுகாதார நிலையத்தின் நம்பிக்கை மையம் மூலமாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் 125 பணியாளர்களுக்கு ரத்த வகை, ரத்த அளவு மற்றும் எச்ஐவி பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த முகாமில், சுகாதார ஆய்வாளர் பவின் அப்பர் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் நிர்வாக உதவியாளர் கவிதா, நம்பிக்கை மைய ஆலோசகர் சரவணன், ஆய்வக நுட்பனர் அண்ணாமலை, மொளசி  பஞ்சாயத்து அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com