புதுசத்திரம் அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்குரைஞரின் காரை எரித்ததாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சின்ன களங்காணியைச் சேர்ந்தவர் கே.எஸ். லோகேஷ். வழக்குரைஞரான இவர், புதுக்கோம்பை ஸ்ரீஒட்டையடி பெரியசாமி கோவில் பூசாரியாக உள்ள அண்ணாதுரை என்பவரின் வழக்கு ஒன்றை நடத்தி வருகிறார்.
பூசாரியின் எதிர் மனுதாரரான பரமசிவம் வழக்குரைஞர் லோகேஷை சந்தித்து பூசாரிக்கு ஆதரவாக வாதாட கூடாது எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவில் அப் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த லோகேஷ் காரை பரமசிவமும், அவருடன் வந்த இருவரும் தீவைத்துச் சென்றனராம்.
இதுகுறித்து வழக்குரைஞர் லோகேஷ் புதுசத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் செல்லத்துரை, மூர்த்தி என்ற இருவரை போலீஸார் கைது செய்தனர். பரமசிவத்தைத் தேடி
வருகின்றனர்.