பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பி.சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் எலச்சிப்பாளையம் ஒன்றியச் செயலாளர் சு. சுரேஷ், சிஐடியு மாவட்ட உதவிச் செயலாளர் கு. சிவராஜ் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். ரமேஷ் எஸ். சக்திவேல் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.