நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் செ. காந்திசெல்வன் தலைமையில் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது .
விழாவில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் கே.எம். ஷேக்நவீத், சிறுப்பான்மையினர் பாஸ்டர் ரெவரண்ட் சாந்தகுமார், ஆலீன் ஷா, மாநில நிர்வாகிகள் ரா.நக்கீரன், ப.ராணி, மாவட்ட நிர்வாகிகள் விமலா சிவக்குமார், கே. செல்வம், ஒன்றியச் செயலர்கள் கே.பி. ஜெகநாதன், எம்.பி.கெளதம், செந்தில் முருகன், துரை ராமசாமி, பி. பாலசுப்ரமணியம், நகர செயலர்கள் என்.ஆர்.சங்கர், ராணா ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.