ஊராட்சி சபைக் கூட்டம்

பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் பரமத்திவேலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.எஸ். மூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்துக்கு மோகனூர் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
பரமத்திவேலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.எஸ். மூர்த்தி தலைமை வகித்துப் பேசியதாவது:
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
கூட்டத்தில் நன்செய் இடையாறு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், ராஜா வாய்க்காலில் படித்துறை அமைக்க வேண்டும், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எம்எல்ஏ-விடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com