ராசிபுரம் திமுக இளைஞரணி சார்பில், சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் நகர 23-ஆவது வார்டு பகுதியில் நடைபெற்ற விழாவில், நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர் தலைமை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர் எம்.கார்த்திக் வரவேற்றார். இதில், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் பங்கேற்று, திமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினார். இதில் நகர திமுக துணை செயலர் ரவிச்சந்திரன், வெண்ணந்தூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே போல் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியேற்று விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.