வெண்ணந்தூர் அருகே அறமத்தாம்பாளையத்தில் தனியார் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க, அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தனியார் நிறுவனத்தின் செல்லிடப்பேசி கோபுரம் குடியிருப்புப் பகுதியையொட்டி அமைக்கப்பட்டு வருகிறதாம். இதனால் கதிர்வீச்சு பிரச்னையால் பாதிக்கப்படுவோம் என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.