நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், தியாகிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை- 4 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் இதில் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.