ஓய்வூதியத்தை புதுப்பிக்க 30-ஆம் தேதி கடைசி நாள்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள், தங்களது ஓய்வூதியத்தை புதுப்பித்துக் கொள்ள வரும்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள், தங்களது ஓய்வூதியத்தை புதுப்பித்துக் கொள்ள வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலத்தின் வாயிலாக, ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், 2019-2020-ஆம் ஆண்டுக்கான நேர்காணலுக்காக சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கருவூலகத்துக்கு நேரிலோ அல்லது ஜீவன் பிரமான் இணையதளம் வாயிலாகவோ, வாழ்நாள் சான்றின் மூலமாகவோ ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். 
நாமக்கல் மாவட்டத்திலுள்ள 14,060 ஓய்வூதியர்களில் இதுவரை 12,724 பேர் மட்டுமே நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். இதுவரை சம்பந்தப்பட்ட கருவூலங்களில் நேர்காணலுக்கு செல்லாத ஓய்வூதியர்கள், கடைசி நாளான வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30)-க்குள் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இதில் பங்கேற்கவில்லையெனில், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியமானது நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com