விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), விவேகானந்தா மகளிர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி, விவேகானந்தா மேலாண்மைக் கல்லூரி ஆகிய நான்கு கல்லூரிகளில் கல்லூரி தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவன தாளாளர் மு.கருணாநிதி தலைமை வகித்து விழாவை தொடக்கி வைத்தார். நிர்வாக இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை நிர்வாக இயக்குநர் அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத் தலைவர் கிருபாநிதி, இயக்குநர்
நிவேதனா கிருபாநிதி, விவேகானந்தா கல்விக் குழுமத்தின் ஆலோசகரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான விஸ்வநாதன், முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், சேர்க்கை இயக்குநர் வரதராஜு மற்றும் பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் விஜயகுமார், ரவிச்சந்திரன், சரவணகுமார், சாய்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கலியமூர்த்தி கலந்து கொண்டு, பெண் கல்வியின் அவசியம் மற்றும் சுயப் பாதுகாப்பு ஆகியவை குறித்து பேசினார். விழாவில் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள், புலத் தலைவர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.