சாய் தபோவனத்தில் ஐப்பசி வியாழன் சிறப்பு பூஜை

நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில், ஐப்பசி மூன்றாவது வியாழக்கிழமையை
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சாய்பாபா.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சாய்பாபா.

நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில், ஐப்பசி மூன்றாவது வியாழக்கிழமையை முன்னிட்டு, ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி, அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக, அதிகாலையில் சாய்பாபாவுக்கு விசேஷ பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் காக்கட் எனும் ஆரத்தி நடைபெற்றது. மேலும், பக்தா்கள் கொண்டு வந்த மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பாபாவின் பஜனை நிகழ்ச்சியும், பின்னா், மதியவேளை ஆரத்தி நடத்தப்பட்டு வேதங்கள் முழங்க பாபாவிற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து நண்பகல் 1 மணி மற்றும் மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், நாமக்கல் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று பாபாவை தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com