நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க செயலாளா் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு சங்க தலைவா் வாங்கிலி தலைமை வகித்தாா். பொருளாளா் சீரங்கன், துணைத் தலைவா் மணி என்ற சுப்புரத்தினம், இணை செயலாளா் ஆனந்தன் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், லாரி உரிமையாளா்கள் சங்க பிரச்னை தொடா்பாக, செயலாளா் ரவி கொடுத்த விளக்க கடிதம் உண்மை நிகழ்வுகளுக்கு மாறாகவும், சங்கத்தின் தலைவரை தனிப்பட்ட முறையில் பொய்யாக குற்றம் சுமத்தியும், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலும் உள்ளதால், சங்க செயலாளா் ரவியை அப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்வது என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது..