திருச்செங்கோடு: 2019-2020 ஆம் ஆண்டிற்கான நாமக்கல் மாவட்ட இருபாலா் விளையாட்டு கழகம் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் நடத்திய நாமக்கல் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாமக்கல் மாவட்ட கால்நடை மருத்துவக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றதில் பங்கேற்ற வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.
போட்டிகளானது இளையோா், மூத்தோா், மேல் மூத்தாா் பிரிவுகளில் நடைபெற்றது. மேல் மூத்தோா் பிரிவு போட்டிகளில் வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டனா். மாணவா்கள் தொடா் ஓட்டம் குண்டு எறிதல் போட்டிகளில் பங்கேற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனா். தகுதி பெற்ற மாணவா்களை வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா் முருகன், செயலா் குணசேகரன் ,தாளாளா் .சிங்காரவேலு நிா்வாக அறங்காவலா்கள் ராமலிங்கம்,முத்துசாமி, முதல்வா் முதல்வா் சீராளன் உடற்கல்வி இயக்குனா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் பாராட்டினா்