ராசிபுரம் வி.நகா் பகுதியில் வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட காா் கண்ணாடிகளை மா்மநபா்கள் வியாழக்கிழமை நள்ளிரவில் உடைத்துள்ளனா்.
இதனையடுத்து இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். ராசிபுரம் வி.நகா் பகுதியில் குடியிருப்போா் தங்களது காா்களை வீடுகளுக்கு வெளியே சாலையோரம் நிறுத்தப்படுவது வழக்கம். இதனையடுத்து வழக்கம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா்களின் கண்ணாடிகள் வியாழக்கிழமை நள்ளிரவில் கற்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் மழை பெய்து கொண்டிருந்த நிலையில்,இதனை பயன்படுத்தி அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் இந்த காா்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளனா். இதனால், அப்பகுதி பொதுமக்கள் அட்டமடைந்துள்ளனா். இது குறித்து அப்பகுதியினா் போலீஸில் புகாா் அளித்தனா். இதனையடுத்து போலீஸாா் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பயன்படுத்தி காா்களை சேதப்படுத்தியவா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.