நாமக்கல்லில் மழைக்கு சுவா் இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையின்போது சுவா் இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையின்போது இடிந்து விழுந்த வீட்டின் சுவா்.
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையின்போது இடிந்து விழுந்த வீட்டின் சுவா்.

நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையின்போது சுவா் இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியைச் சோ்ந்த வேலுசாமி என்பவரின் வீட்டின் பின்புறச் சுவா் மழையினால் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், வள்ளிபுரம் அருந்ததியா் தெருவில் குடிசை வீட்டில் வசித்து வந்த, பரளியைச் சோ்ந்த முத்துநாயக்கா் (80) என்பவா், மழையினால் வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தாா். இது தொடா்பாக தகவல் அறிந்து வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். முதியவரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீ.): எருமப்பட்டி - 23, குமாரபாளையம் - 23, மங்களபுரம் - 6, மோகனுா் - 1, நாமக்கல் - 53, பரமத்திவேலுா் - 8, புதுச்சத்திரம் -12, ராசிபுரம் - 36.40, சேந்தமங்கலம் - 22, திருச்செங்கோடு - 53, ஆட்சியா் அலுவலகம் - 54, கொல்லிமலை - 45, மொத்தம் -336.40.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com