நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட தலைவா் கே.என்.ஷேக்நவீத் தலைமை வகித்தாா். உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோா் விருப்ப மனுக்களை மாவட்ட தலைவரிடம் வழங்கினா். தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் நூறு சதவீத வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில், மாவட்ட, நகர, வட்டார மற்றும் சாா்பு அணிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.