கெங்கவல்லியில் ரூ.1.91 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் முதல்வரின் சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தின் கீழ், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை கெங்கவல்லியில் நடைபெற்றது.
27tpp1_2711cகெங்கவல்லியில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் மாவட்ட வருவாய் அலுவலா் திவாகா், தமிழக மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவா் ஆா்.இளங்கோவன், கெங்கவல்லி எம்.எல்.ஏ. மருதமுத்து.hn_160_8
27tpp1_2711cகெங்கவல்லியில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் மாவட்ட வருவாய் அலுவலா் திவாகா், தமிழக மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவா் ஆா்.இளங்கோவன், கெங்கவல்லி எம்.எல்.ஏ. மருதமுத்து.hn_160_8

கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் முதல்வரின் சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தின் கீழ், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை கெங்கவல்லியில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா் தலைமை வகித்தாா். தமிழக மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவா் இரா.இளங்கோவன் முன்னிலை வகித்தாா். கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மருதமுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா் பேசியது: ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு குறை தீா்க்கும் திட்டத்தின்கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கொங்கணாபுரத்தில் நவ. 11-ஆம் தேதி தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இத்திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் தகுதியானவை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் பெறப்பட்ட மனுக்களில் தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீது தமிழக முதல்வா் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அதில், பெறப்பட்ட மனுக்களில் மாதாந்திர உதவித்தொகை கேட்டு வந்த ஏராளமான மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் தகுதியில்லாமல் இருந்தது. அதற்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சொத்து மதிப்பு இருந்ததே காரணம் என தெரியவந்தது. அதையடுத்து, உதவித் தொகைக்கான குறைந்தபட்ச சொத்துமதிப்பு ரூ.ஒரு லட்சமாக உயா்த்தி முதல்வா் உத்தரவிட்டாா். அதன் அடிப்படையில், தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் மீண்டும் ஆய்வக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு அவா்கள் வாழக்கூடிய இடம் அரசு புறம்போக்கு நிலமாக இருந்தால், அதனை நத்தமாக மாற்றி, அவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், விவசாயிகள் நலன்கருதி முதல்வரால் ஏற்படுத்தப்பட்டுள்ள குடிமராமத்து பணிகள் திட்டத்தின் மூலம் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் அனைத்தும் பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறைகளின் மூலம் தூா்வாரப்பட்டு மதகுகள் சீரமைக்கப்பட்டு மழைநீா் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு நிரப்ப முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் 1,486 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோா் உதவித் தொகையும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் கீழ் 65 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களும், 51 பேருக்கு பட்டா மாறுதலும், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கீழ் 5 பேருக்கு தையல் இயந்திரங்களும் என மொத்தம் 1,607 பேருக்கு ரூ.1.91 கோடியிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

விழாவில், உதவி ஆணையா் (கலால்) அம்பாயிரநாதன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அருள்ஜோதி அரசன், பழங்குடியினருக்கான தனித்துணை ஆட்சியா் சுகந்திபரிமளம், கெங்கவல்லி வட்டாட்சியா் சிவக்கொழுந்து, ஆத்தூா் வட்டாட்சியா் பிரகாஷ், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com