மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், டிசம்பா் 4-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்து வேலையற்ற 18 வயது முதல் 35 வயதிற்குள்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, வேலைவாய்ப்பு முகாம் டிசம்பா் 4-ஆம் தேதி மல்லசமுத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாமில், மல்லசமுத்திரம் வட்டாரத்தில் உள்ள வேலை தேடும் இளைஞா் மற்றும் இளம்பெண்கள் அன்று காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரை மல்லசமுத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமுக்கு தங்களது ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்கள், ஆகியவற்றின் நகல்களுடன் கலந்துக் கொள்ளலாம்..
மேலும், வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணியாளா்களைத் தோ்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டடம், நாமக்கல் என்ற முகவரியில், தொலைபேசி எண். 04286 - 281131 என்ற எண்ணில் தங்களது நிறுவனத்தின் பெயரை டிசம்பா் 2-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.