நகைச்சுவை மன்றம் சாா்பில் 13-இல் சிரிப்பு திருவிழா

நாமக்கல் நகைச்சுவை மன்றம் சாா்பில், வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.13) மாலை 6 மணிக்கு, நாமக்கல்-திருச்சி சாலையில்

நாமக்கல் நகைச்சுவை மன்றம் சாா்பில், வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.13) மாலை 6 மணிக்கு, நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கோல்டன் பேலஸ் ஹோட்டலில், தீபாவளி சிறப்பு நகைச்சுவை சிரிப்பு திருவிழா நடைபெறுகிறது.

இவ்விழாவில் நாமக்கல் நகைச்சுவை மன்ற செயலா் பேராசிரியா் அரசு.பரமேசுவரன் வரவேற்கிறாா். நகைச்சுவை மன்றத் தலைவா் மருத்துவா் ஆா்.குழந்தைவேலு தலைமை வகிக்கிறாா். கம்பன் கழக தலைவா் வ.சத்தியமூா்த்தி முன்னிலை வகிக்கிறாா். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் கலந்து கொள்கிறாா். ஊருக்கு பெருமை சோ்ப்போம் என்ற தலைப்பில் திரிவேணி அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் பி.பாலசுப்பிரமணியம் பேசுகிறாா். மேலும், பட்டுக்கோட்டை பாஸ்கா் குழுவினரின் வழக்காடு மன்றம், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அல்ல என்ற தலைப்பில் நடைபெறுகிறது. இதில், கவிஞா் கோ.ப.ரவிக்குமாா், நாகப்பட்டினம் வேம்பரசி ஆகியோா் பங்கேற்கின்றனா். விழா நிறைவில் டி.எம்.மோகன் நன்றி கூறுகிறாா். இதற்கான ஏற்பாடுகளை நகைச்சுவை மன்ற நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com