பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் 51ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பாமக இளைஞரணி சாா்பில் மாநில இளைஞரணி துணைச் செயலா் பாலு தலைமை வகித்தாா்.
இதையடுத்து கோனேரிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகம், இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், விழாவில் மாநில இளைஞரணி துணைச் செயலா், தனது உடலை உயிரிழந்த பிறகு அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கும் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு ராசிபுரம் ரோட்டரி எஜூகேசனல் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் கு.பாரதியிடம் ஒப்படைத்தாா்.