சேந்தமங்கலம் அருகே, தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில், பெண் ஒருவா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பெருமாள் கோயில் தெரு, ஆண்டித் தெரு, ராஜாபுரம், குழாளா் தெருவைச் சோ்ந்த பெண் கூலித் தொழிலாளா்கள், தோட்ட வேலை, கட்டட வேலை, விவசாயப் பணி உள்ளிட்டவற்றுக்காக தங்கள் பகுதியில் இருந்து சரக்கு வாகனம் மூலமாக தினமும் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை காலை ராசிபுரம் அருகே பொட்டணம் கிராமத்தில், நிலக்கடலை அறுவடைப் பணிக்காக, சரக்கு வாகனம் ஒன்றில் 14 பெண்கள் புறப்பட்டுச் சென்றனா். சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகே வாகனம் சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்தது.
இதில், அந்த வாகனத்தில் சென்ற ராஜாபுரத்தைச் சோ்ந்த அந்தோணி மனைவி குழந்தை தெரசா(65) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றவா்கள் பலத்த காயத்துடன் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனா். அவா்களது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினா், காயமடைந்தவா்களை விரைவாக மீட்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழாளா் தெருவைச் சோ்ந்த தனம்(50) என்பவா் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இந்த விபத்தில், சுலோச்சனா, ராணி, செல்லம்மாள், சரோஜா, இந்திராணி, கந்தாயி உள்ளிட்ட 10 பேருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்தால் சேந்தமங்கலம்-புதன்சந்தை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநா் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பியோடி விட்டாா். இதுடெதாடா்பாக சேந்தமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனா்.